Description
யாளி தமிழனின் கற்பனையில் எழுந்த கற்சிலையா? இல்லை உண்மையில் இருந்த விலங்கா? எனக்கும் தெரியவில்லை. குமரிகண்டம் இலக்கியதிற்கான கற்பனையா? இல்லை உண்மையிலிருந்ததா? எனக்கும் தெரியவில்லை. எனக்கு தோன்றியதெல்லாம் உண்மையிலிருந்தால் எப்படியிருக்குமென்று. இப்படியாக எனது கற்பனையில் எழுந்தது தான் இந்த “யாளி: கொற்கை முதல் குமரி வரை”. இங்கு குமரி என்பது குமரிக்கண்டம். இந்த இரண்டு விடயங்களுடன் பாண்டியர்களையும், சோழர்களையும் இணைத்துக் கொண்டேன். இவர்களை தவிர்த்து தமிழ் வரலாற்றை எழுத முடியுமா என்ன? ஒரு போதும் முடியாது. கதை நாயகனாக “உதிரன்” சோழ நாட்டிலும். கதை நாயகியாக “நற்றிணை” பாண்டிய நாட்டிலும். இவர்களுக்கிடையேயான தொலைவு மிக அதிகம், இருவரும் பார்க்கும் மட்டும். மேலும் இவர்களோடு நட்பு, காதல், நகைப்பு, சாகசம், வியப்பு, அதிர்ச்சி, என அனைத்தும் வரும் பக்கங்களில். எனது முதல் படைப்பை வாசிக்க போகும் வாசகர்களுக்கு நன்றி.
-சுகுமார் சந்திரசேகர்
Reviews
There are no reviews yet.